Tuesday, April 6, 2010

ஆச்சரியமானவள்


நீ ஆச்சரியமானவள்

என் கண்களுக்குப் புலப்படாத
உணர்வுகளுக்குள்ளும்
இதுவரை நான் பார்த்தறியா
என் இதயத்தினுள்ளும்
புகுந்து விளையாடும்
ஆச்சரியமானவள் நீ

என் செறிந்த கவலைகளையும்
மிகச் சிறிய நினைவினால்
துடைத்தெறியும்
ஆச்சரியமான பலம்
உன்னில் மட்டுமேயுண்டு

என் மனதின் கலவைக்குள்
அநாயாசமாகத் தனித்து நின்று
உதிர்க்கும் புன்னகையில்
ஆச்சரியமானவள் நீ

என்னை சிரிக்க வைப்பதில்,
உறங்க வைப்பதில்,
விழிக்க வைப்பதில்,
இயங்க வைப்பதிலெல்லாம்
நீ கொண்டிருக்கும் பலம்
ஆச்சரியமானது

இன்னும் -
என் ஒவ்வொரு மூச்சின்
இறுதியிலும்
உயிர்த்து நிற்கும்
நிம்மதியைப் பலப்படுத்துவதிலும்
நீ ஆச்சரியமானவள்தான் கண்மணி!

March 2006

No comments:

Twitter Bird Gadget