Monday, May 3, 2010

இரவுப் போர்வையும் நானும்


உஷ்ண மூச்சு அடங்கிற்று
தளர்ந்த பிடியில்
தணிந்த தாகத்தின் புளகாங்கிதம்

போர்க்குத் துணிந்து விட்ட
முள்ளம் பன்றியாய்
சிலிர்த்திருந்து அடங்கும் ரோமக்கண்களூடு
வியர்வையின் வாடை தலைநீட்டிற்று

இடைவேளை முடித்து மீண்டும்
நடைமுறைக்கு வந்த உலகில்
இருண்மையின் பிசுபிசுப்பு

இன்பம், சுகம், நிம்மதி, அமைதி!

அழுதும் வடிவும் அவனை
சாந்தப்படுத்த
சற்று நேரம் தேவைதான்

பக்கவாட்டில் திரும்பிய போது
கண்மூடிக் கனிந்திருக்கும்
என் இரவுப் போர்வையின் மலர் முகம்
அந்த நடுச்சாமத்திலும் எனக்கு
நன்றாகத் தெரிந்திற்று

No comments:

Twitter Bird Gadget